Uyirin Neruppai Oodhi Valarththavanin Naatkurippugal - 2/உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள் - 2 - Charu Nivedita/சாரு நிவேதிதா
இந்த நாட்குறிப்புகள், சிஸிஃபஸின் பாறையைப் போன்றவை. ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய பாறையை மேலே தள்ளி, உச்சியை நெருங்கும் போது அது கீழே உருண்டு விழுந்தாலும், மறுநாள் மீண்டும் அதைத் தூக்கி நடக்கத் தொடங்கும் பயணம். இந்தப் பக்கங்களில் நான் பதிவு செய்திருப்பது வெறும் சம்பவங்கள் அல்ல; அந்தப் பாறையைத் தள்ளும் ஒவ்வொரு துளி வியர்வையையும், இதயத்தின் துடிப்பையும், விழுந்த பிறகு எழுந்து கொள்ளும் தருணங்களையும் சிஸிஃபஸ் போலவே, வாழ்வின் அபத்தமான சுழற்சியில் சிக்கியிருந்தாலும், அதை அறிந்தபடியே தொடர்வதில் ஒரு விசித்திரமான சுதந்திரம் இருப்பதைக் கண்டேன்.
இந்த நாட்குறிப்புகள் என் சாட்சி. என் போராட்டதின், என் எதிர்ப்பின், என் அன்பின், என் கோபத்தின், என் தனிமையின், என் நம்பிக்கையின் சாட்சி. இது வெறும் நாட்குறிப்புகள் அல்ல. உருண்டு விழும் பாறையின் நினைவில் எழுதப்பட்ட ஒரு பிரார்த்தனை; நாளைய மனிதனைத் தேடி, இன்றைய மனிதன் விட்டுச் சென்ற காலடித் தடங்கள்... - சாரு நிவேதிதா