Jodippuraavai Enge Kaanom?/ஜோடிப்புறவை எங்கே காணோம்? - Charu Nivedita/சாரு நிவேதிதா
புனைவுகளின் வழியே ஒரு தனித்துவமான ஈரோடிக் ஏஸ்தெடிக்ஸை உருவாக்குவதே என் முயற்சி. இது பாலியல் இன்பத்தைத் தாண்டி, ஆன்மீகப் பேரின்பத்தையும் உள்ளடக்கியது. பாக்ஹின் சிம்ஃபனியைக் கேட்கும்போது நம்மை மீறி அடையும் transcendal bliss & காம உச்சத்தின் இன்மை - இவை இரண்டும் ஒரே சூன்யத்தின் வெளிப்பாடுகள். கடவுள் சூன்யம், மரணமும் சூன்யம்,காமம் சூன்யம் - இவை மூன்றிலும் “நான்" இல்லாமல் போகிறது. அதனால்தான் ஜார்ஜ் பத்தாய் போக உச்சத்தை La petite mort என்கிறார். சிறிய மரணம். பீத்தோவன் தன் செவித்திறனை முழுமையாக இழந்த நிலையிலும் ஒன்பதாம் சிம்ஃபனியைப் படைத்தது போல - இழப்பின் ஊடே பேரின்பம் பிறக்கிறது. அத்தகைய ஈரோடிக் ஏஸ்தெடிக்ஸை உருவாக்கும் முயற்சியே 'ஜோடிப்புறாவை எங்கே காணோம்?' - காமம், இழப்பு, சூன்யம் மூன்றும் பின்னிப் பிணைந்து வாசகரை இன்மையின் பேரின்பத்தில் ஆழ்த்தும் ஒரு பயணம். - சாரு நிவேதிதா.